தூப்பாக்கி சூடு - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு.!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (22.10.2025)ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

“மிதிகம லசா” எனப்படும் லசந்த வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த “மிதிகம லசா” சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை