மட்டக்களப்பில் விஷேட வீதிப் போக்குவரத்துச் சோதனை முன்னெடுப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விசேட செயல் திட்டம் ஒன்றினை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பொலிஸாரும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகாரிகளும் இணைந்து   இன்று(27.10.2025) காலை மட்டகக்ளப்பில் முன்னெடுத்தனர்

இதன் போது பிரதான வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்  போக்குவரத்து பாவனைக்கு உரிய முறையில் காணப்படாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக வாகனங்கள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் பிரேக்குகள் டயர்கள் சிக்னல் லைட்டுகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் வாகனங்களை  திருப்பி அமைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனை உரிய முறையில் கடை பிடிக்காத வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது இன்றைய பரிசோதனையின் போது சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விசேட பரிசோதனை  செயல்திட்டத்தின் போது மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து போலீஸ் பொறுப்பு அதிகாரி மற்றும் மோட்டார் திணைக்கள உயர் அதிகாரிகள் போக்குவரத்து போலீசார்  கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை