நாட்டின் மீது நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (தாழமுக்கம்) விலகிச் செல்வதால், வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
எனினும், நவம்பர் 22ஆம் திகதி அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்குக் கடற்கரையை அண்மித்து நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.