மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த அருளானந்தம் அக்சயா (16 வயது) என்பவரை கடந்த 23 ம் திகதியிலிருந்து காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் மாயமான சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் (0740455935) தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.