மட்டக்களப்பில் சமூக நலன்புரி(SWO) அமைப்பினால் மாணவர்களுக்கு துவிச்கக்கர வண்டி வழங்கி வைப்பு.!

சமூக நலன்புரி(SWO) அமைப்பினால், அவுஸ்திரேலியா சிட்னி முருகன் சைவ மன்றத்தின் நிதி உதவியுடன், மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் அவர்களின் முன்நிலையில் மாணவர்களுக்கு நேற்று(23.12.2025) ஆம் திகாதி துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் கால்நடையாக நீண்ட தூரம் பயணம் செய்து பாடசாலை செல்கின்ற மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வானது நேற்று (23.12.2025)ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் முன்னியில்  மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூக நலன்புரி(SWO) அமைப்பின்  உத்தியோகஸ்தர்கள் கலந்தது கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை