திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து,நேற்றையதினம்(10.1.2026) சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 6 ஆம் திகதி அந்த விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து,அதற்கு பதிலாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.