மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றிரவு (23.01.2026)ஆம் திகதி இரவு 8 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு மற்றையவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதி கேன்சர் வைத்தியசாலைக்கு அன்மித்த பகுதியில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாளியப்பா ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் வசிக்கும் இளைஞர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.