40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி.!

வலப்பனை பகுதியில் இன்று (01.02.2026) 50 அடி உயரமான பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழும் அபாயம் ஏற்பட்ட நிலையில், சாரதியின் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நில்தண்டாஹின்னவிலிருந்து டெரிபஹ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான வலப்பனை டிப்போ பஸ், ராசிங்கொல்ல பகுதியில் உள்ள கூர்மையான வளைவில் செல்லும்போது திடீரென இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது.


சாரதியின் சாமர்த்தியம் 
அந்த நேரத்தில் பஸ் சுமார் 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

“ரசிங்கொல்ல பகுதியில் உள்ள முதல் வளைவை கடக்கும் போது பஸ்ஸில் பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக ஹேண்ட்பிரேக் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தினேன்,” என சாரதி தெரிவித்துள்ளார். “கீழே பார்த்தபோது செங்குத்தான பாறை தெரிந்தது. பரிசோதித்தபோது, பஸ்ஸின் இணைப்பு பகுதி இரண்டாக உடைந்திருந்ததை கண்டறிந்தேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிப்போவிற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப குழு உடைந்த இணைப்பை மாற்றியமைத்தது. பின்னர் பஸ் மேலதிக பழுதுபார்ப்பிற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

15 வருடங்களாக சேவையில் இருக்கும் அந்த சாரதி, தித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பின்னரும் இந்த வீதி இன்னும் மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை