ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர்.!

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று(23.02.2026)ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர்.


இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலைப்பாடு மற்றும் சிவில் அரசியல் பொருளாதார உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
புதியது பழையவை