இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை..!

உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 டொலராக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (பெப்ரவரி 24) தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


கடந்த வாரம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனையானது.

நேற்று அதன் விலையில் 4,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்து, இன்று தங்கத்தின் விலையில் மேலதிக மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
புதியது பழையவை