இலங்கைக்கு மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை (24.02.2026)ஆம் திகதி  ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர்.

அதன்படி....

01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra,

02- கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari,

03- ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராகTomaž Mencin ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை