ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்த செக்! சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்..!

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கப்பல்களைத் தாக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தப் பகுதியில் கடல்சார் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 15,000 பயணக் கப்பல் பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹார்முஸ் நீரிணையில் ஒரு முக்கியமான பாதையாகும், சாதாரண சூழ்நிலைகளில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இதன் வழியாகவே செல்கின்றது.


இதேவேளை, "தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை