தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் ஓட்டிச் சென்ற கார், மதில் மீது மோதியதில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சிலாபத்தில் பண்டாரவத்தை வளைவில் வீதியில் இருந்து விலகி மதில் ஒன்றில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காரும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், அப்போது காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.