நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் அதிரடி நடவடிக்கை..!

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் (09.03.2026)ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
புதியது பழையவை