இன்றைய இளம் தமிழ் தலைமுறைகள் அபிலாசைகள் சிதைக்கப்பட்டுவிட்டதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் ஆக்ரோசமாக பேசி அரசாங்கத்தையும் , அரங்கத்தையும் அதிர வைத்துள்ளார்.
உடைந்துபோன தமிழ் கட்சிகளால் தமது அபிலாசைகள் சிதைக்கப்பட்டு விட்டதாக இந்துக்கல்லூரி மாணவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய தலமைகளின் ஒற்றுமையின்மை
தமிழீழம் வேண்டும் என்பதயே குறிக்கோளாக கொண்டு ஒரு காலத்தில் வாழ்த சமூகம் , இன்று அதே சமூகத்தின் இளம் சமூகம் விஜய் - சங்கீதா, த்ரிக்ஷா பிரச்சனையில் போடுவதாகவும் மாணவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்றைய காலத்தில் ஆயுதங்களை கையெடுத்து விடுதலைக்காக போராடிய சமூகத்தில் இருந்து வந்தவர்கள், இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகி , வாள்வெட்டில் ஈடுபடுகின்றதாகவும், இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் தேசிய தலமைகளின் ஒற்றுமையின்மையே என்றும் தனது கருத்தை ஆணித்தரமான எடுத்துக்கூறியுள்ளார்.