சூரியன் மேஷ ராசியில் தடம் பதிக்கும் மங்களகரமான இந்த சித்திரை புத்தாண்டில், எமது அன்பிற்குரிய வாசகர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் Battinatham செய்தித் தளம் தனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டிலும் புதிய கணக்குகளைத் தொடங்குவதும், கலைகளைப் பயில ஆரம்பிப்பதும் எமது மரபு. அந்த வகையில், பிறந்துள்ள இந்த 'பராபவ' ஆண்டு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அள்ளித் தர எமது வாழ்த்துகள்.
புத்தாண்டு பிறப்பு:-
இன்று (14.04.2026)காலை (வாக்கிய பஞ்சாங்கப்படி 08:40 / திருக்கணிதப்படி 09:32) புதிய ஆண்டு பிறக்கிறது.
மருத்து நீர்:-
நண்பகல் 12:40 மணி வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு உகந்த நேரமாகும்.
கைவிசேடம்:-
இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான சுப நேரத்தில் பெரியோர்களிடம் கைவிசேடம் பெற்று உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.
மங்கள ஆடை இன்று சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடைகளை அணிந்து சிறப்பிக்கலாம்.
இலங்கையில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றங்களுக்கு மத்தியிலும், எமது பாரம்பரியத்தை கட்டிக்காத்து நம்பிக்கையுடன் இந்தப் புத்தாண்டை வரவேற்போம்.
இந்த இனிய நாளில், புதிய விடியலை நோக்கிப் பயணிக்கும் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க Battinatham செய்திக் குழுமம் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறது.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்