இலங்கையில் நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை மாற்றம்!

இலங்கையில் நள்ளிரவுமுதல் (02.05.2026)எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கமைய மாற்றியமைப்பதாக லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளை எந்தவித மாற்றமுமின்றி, பழைய முறைப்படியே பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 
புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை