வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் நேற்று (12.06.2026) ஆம் திகதி மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் இந்த வருடத்திற்கான பெருவிழா ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து, நேற்று(12.06.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை தீமூட்டுதல் வைபவம் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது.
நேற்று மாலை நடைபெற்ற பிரதான தீமிதிப்பு நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.
அம்மனின் அருள் வேண்டித் திரண்ட பக்தர்களின் வருகையால் புன்னைச்சோலை கிராமமே ஆன்மீகக் கடலில் மூழ்கியிருந்தது.