இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு ஆபத்து.!

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடும்பங்களை வலியுறுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாடு தழுவிய விழிப்புணர்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

வீடுகளிலும் பணியிடங்களிலும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய எவ்வித இடமும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள அந்த பணியகம், வாரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் தேங்கும் இடங்களைச் சோதித்து அவற்றை அகற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தோட்டங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களான பூந்தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் யோகர்ட் கோப்கைகள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் தகரப் பெட்டிகள்; வீட்டுப் பூந்தொட்டிகள், குளிர்சாதனப்பெட்டித் தட்டுகள், வாளிகள் மற்றும் பீப்பாய்கள் போன்ற உட்புற இடங்கள்; இலைகளால் அடைபட்ட கூரை வடிகால்கள்; மற்றும் தேங்கி நிற்கும் நீர் சேரக்கூடிய பணியிடங்கள் அல்லது பாடசாலைகள் ஆகியவை அடங்கும்.


48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நோய் தாக்கிய பிறகு அவதிப்படுவதை விடச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே சிறந்தது என்று சுட்டிக்காட்டிய சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (Health Promotion Bureau), நோய்த்தடுப்பு நடவடிக்கைகளே மிக முக்கியம் என்றும் வலியுறுத்தியது.


அதேநேரம், 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
புதியது பழையவை