மட்டக்களப்பில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை - மளிகைக் கடைக்கு ரூ. 30,000 அபராதம்!

மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக் கடை ஒன்றிற்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் 30,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று (10.07.2026)ஆம் திகதி  தீர்ப்பளித்துள்ளது.

​இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

​பெரியகல்லாறு பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, பெரியகல்லாறு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் அவர்களினால் உணவுச் சட்டத்தின் (Food Act) கீழ் குறித்த கடைக்கு எதிராக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

​இந்த வழக்கு இன்று (10.07.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

அதனையடுத்து, மளிகைக் கடையின் உரிமையாளருக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறான கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை