மட்டக்களப்பு மாவட்ட புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் உத்தியோகபூர்வமாக கடமையேற்பு.!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் இன்று (01.07.2026)ஆம் திகதி  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பிரிவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் மொஹமட் பஸீர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

​மாவட்டத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் சமுர்த்தித் திட்டங்களை மேலும் வலுவூட்டி, அதனை வெற்றிகரமாக முன்னோக்கி நகர்த்துவதற்கு புதிய பணிப்பாளரின் பணிக்காலம் சிறக்க வேண்டுமென இதன்போது அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர்.

​இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிவந்த திரு. எஸ். ராஜ்பாபு அவர்கள் இடமாற்றம் பெற்று, கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இன்றைய தினமே (01.07.2026) தனது பதவியினைப் பொறுப்பேற்றுள்ளார்.

​கடந்த நான்கு வருடங்களாக கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிவந்த திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம், அந்த இடமாற்றத்திற்கு அமைவாகவே தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை