மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாக ஆரம்பம்.!

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற, குறிஞ்சி நிலக் குமரனின் அற்புதத் தலமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (09.07.2026)ஆம் திகதி  காலை கொடியேற்றத்துடன் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

​ஆலயத்தின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொள்ளும் மும்மூர்த்தித் திருவிழாக்கள், பல்வேறு சப்பரத் திருவிழாக்கள்  தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

​இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்வாகவும், நிறைவு நிகழ்வாகவும் அமையும் அடியார்களின் பாவ வினைகளைத் தீர்க்கும் மகா தீர்த்தோற்சவத் திருவிழா, எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி (30.07.2026)ஆம் திகதி  அதிகாலை 6.00 மணிக்கு ஆலய தீர்த்தக் கேணியில் மிக விமரிசையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்த்தத் திருவிழாவிலும், ஏனைய திருவிழாக்களிலும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தாந்தாமலை எம்பிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிருவாகத்தினரும், ஆன்மீகப் பெரியோர்களும் அடியார்களை அன்போடு அழைக்கின்றனர்.
புதியது பழையவை