வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் 93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று(13.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பில் எடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை, கடந்த ஜனவரி மாதம் முதல் காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.