கிளிநொச்சி A9 வீதியில் கொடூர விபத்து- 21 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

கிளிநொச்சி A9 வீதி, தொண்டமாநகர் பகுதியில் இன்று (12.08.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரஊர்திகள் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
​முன்னால் சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பொருட்களை இறக்குவதற்கு முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மற்றொரு பாரஊர்தி அதன்மீது பலமாக மோதியுள்ளது.
​இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளராகப் பணியாற்றிய 21 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

​இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை