மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நிரஞ்சன் நிறோஜினி எனும் இளம்பெண் ஒருவர் இன்று (19.09.2026)ஆம் திகதி தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 16, 2026 அன்று மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் பெற்றோரின் ஆசியுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், திருமணமாகி சில நாட்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வுயிரிழப்பிற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான புதிதிலேயே இடம்பெற்ற இந்த எதிர்பாராத துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.