மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை (05.09.2026) ஆம் திகதி இரவு இடம் பெற்றுள்ளது.
ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார்.
அந்நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் சத்தமிட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த வழிப்பறிக் கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நகர்ப் பகுதியில் நடமாடும் பெண்கள் தமது தங்க நகைகள், கைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொண்டு செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.