மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு வாவிக்குள் இளைஞர் ஒருவர் குதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (15/09/2026) பிற்பகல் 01:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாவிக்குள் குதித்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இலங்கை கடற்படையினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாவியில் குதித்த இளைஞர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.