பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூ. பிரசாந்தன் மீதான வழக்கு, கொரோனா தொற்று காரணமாக இன்றைய தினம் (01) இணையவழியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார் .

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்  கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.


புதியது பழையவை