களுவாஞ்சிகுடி குடியிருப்பு பகுதியின் பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்டிருந்த அழுகிய நிலையிலுள்ள மனித தலையொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன
நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கொலையச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தநிலையில் குறித்த சம்பவமானது நேற்று வியாழக்கிழமை இரவு 7.00 மனியளவில் இடம்பெற்றதனைத்தொடர்ந்து குறித்த நபர்களே மனித தலையொன்றினை நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் வீசி சென்றுள்ளனர் .
அதைத்தேடர்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததற்கினங்க ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளதுடன் , களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர் . குறித்த மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும் , தோண்டி எடுக்கப்பட்ட தலை அதே பகுதியினைச் சேர்ந்த 83 வயதுடைய கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்னொருவருடைய தலையென இனங்காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் . களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிசார் குறித்த மனிதத் தலையை மீட்டுள்ளதுடன் , குறித்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசாரும் , மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் ( சொக்கோ ) பிரிவினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது