இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் இன்று இந்த நினைவுதின அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு நினைவு தினம் சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.