பண்டிகை காலங்களில் பொது சுகாதார விதிகளை மீறும் வகையில் செயல்படும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த சுற்றறிக்கையின்படி, சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த கடுமையான கண்காணிப்பு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது,
மக்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் சரியான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விளைவாக மற்றும் இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.