விரும்பியவர்கள் வெளியேறலாம்!கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.


அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கத்திற்கு இருந்து விமர்சிக்கும் நபர்கள் தாராளமாக அரசில் இருந்து வெளியேறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனை ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் இன்று தெரிவித்தார். அத்துடன் அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது...

அரசாக எடுக்கும் தீர்மானங்கள் சகலரையும் சார்ந்ததாகும். அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசை விமர்சிக்கும் ஜனநாயக உரிமை சகலருக்கும் இருக்கின்றது.

எனினும், ஆட்சியாளர்கள் அல்லது ஆளும் கட்சிக்குள் உள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரசை மோசமாக விமர்சித்து நெருக்கடிகளை ஏற்படுத்துவதானது, ஆட்சியைக் கொண்டு செல்லக் கடினமானதாக அமையும்.

அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவர்கள் வெளியில் சென்று தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க முடியும் என தெரிவித்தார்.
புதியது பழையவை