குடைசாய்ந்த பாரவூர்தி போக்குவரத்து ஸ்தம்பிதம்



வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் பாரவூர்தியொன்று வீதியினை வீட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 3 மணிநேரமாக ஸ்தம்பித்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வீதியில் வயல் வெளியினை அண்மித்த பகுதியில் பாலம் நிர்மாண பணிகளுக்காக வீதியோரத்தில் போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் பொருட்களை ஏற்றிய பாரவூர்தியொன்று பூந்தோட்டம் பிரதான வீதியூடாக பூந்தோட்டம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாலம் நிர்மாணப்பணி இடம்பெற்று வருகின்ற பகுதியின் மறுபக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பாரவூர்தியின் ஒரு பகுதி வீதியினை விட்டுக் கீழிறங்கி குடைசாய்ந்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா - பூந்தோட்டம் வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் மாற்று பாதையூடான பயணத்தினை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை