கொரோனா அச்சுறுத்தல் தீவிரம் பெற்று வரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று 25 முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்து செல்லாதவர்கள் மற்றும் போக்குவரத்தில் முறையாக சுகாதார நடைமுறைகளைப் பேணாத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தலைமையில் இந்த நடவடிக்கைகள் இன்று (25) காலை முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது முகக்கவசம் அணியாதவர்கள், போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் சுகாதார நடைமுறையை பேணாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.