14ஆம் திகதியும் பயணத் தடையை நீக்க முடியாது


இலங்கையில் தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டின் மூலம் 90 சதவீதமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்ட வசமாக அது சாத்தியமற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர் 14ம் திகதி இந்தக் கட்டுப்பாட்டையும் தளர்த்தினால் ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை