மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே நாளில் 232 கோவிட் தொற்றாளர்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (18)ஒரே நாளில் மட்டும் கோவிட் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 232 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று 19-06-2021ஆம் திகதி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 46 பேருக்கும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் , வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர் உட்பட 232 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கோவிட் தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்ரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் கோவிட் தொற்றால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை