ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.
இதன்போது கைதான உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#