பிக்கு ஒருவர் A-9 வீதியில் போராட்டம்!


இலங்கையில் கொரோனா தொற்று பரவாமலிருக்க அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தம்புள்ளை நகரில் இன்று 14-06-2021ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திவருவதோடு பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

திம்புலாகல விகாரையின் விகாராதிபதியான மாத்தளே சாஷனரத்தன தேரரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் கடும் சொற்களால் விமர்சித்தும் வருகின்றார்
புதியது பழையவை