மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துச்செல்லும் நிலை காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 14பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெரியகல்லாறு 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதியில் தொடர்ச்சியாக அன்டிஜன்,பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் அப்பகுதியை சேர்ந்த 140பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 14பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.