முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்தில் தனியார் காணி ஒன்றில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் அப்பகுதியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்த போதே வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
5 இஞ்ச் எறிகணை ஒன்றும் கிபிர் விமானக்குண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் வெடிபொருட்கள் அந்த காணியில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.