இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்


இந்தோனிசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று 16-06-2021ஆம் திகதி காலை 10.13 மணியளவில், 6.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதே பகுதியில் கடந்த ஜூன் 3 ஆம் திகதி 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை