இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் விடுவிப்பு

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும், இன்று (16)மாலை, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜயர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொழும்பில் இருந்து, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்பட்டிருந்தனர்.

இந்த தனிமைப்படுத்தலுக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் நிலையில், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும், இன்று மாலை, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை