மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 49கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06பேரும் களுவாஞ்சிகுடியில் 02பேரும் வாழைச்சேனையில் 02பேரும் காத்தான்குடியில் 08பேரும் ஓட்டமாவடியில் 02பேரும் கோறளைப்பற்று மத்தியில் 05பேரும் செங்கலடியில் 01,ஏறாவூரில் 17பேரும்,சிறைச்சாலையில் 06பேரும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.