கல்முனையில்-கப்ருக 40 இலட்சம் தென்னங்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம்


பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு இணைந்து மேற்கொள்ளும் வீட்டுக்கு வீடு ‘கப்ருக’ 40 இலட்சம் தென்னங்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நெறிப்படுத்தலில் இன்று(10) கல்முனையில் இடம்பெற்றது .

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கல்முனை தொகுதியில் 500 தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளரின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை தென்னை அபிவிருத்தி பிரிவின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை