மட்டு-இந்து ஆலய திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் வழக்கமான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆலய திருவிழாக்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளதாக இன்று 01-07-2021ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்தவாரம் ஆலயங்களில் பூஜை மற்றும் திருவிழாக்கள் நடாத்த தடை விதிக்கப்பட்டதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது.

இருந்தபோதும் இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தெளிவுபடுத்தப்பட்டதன் காரணமாக தற்போதைய கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு இந்து ஆலயங்களில் வழமையாக இடம்பெறும் நித்திய பூஜைகள் அதிகபட்சமாக ஐந்து பேருடன் நடத்தலாமென்றும், வருடாந்த திருவிழாக்களை பொது மக்களது பங்குபற்றுதலுடன் நடத்த முடியாதெனவும், அதிகபட்சமாக 15 பேருடன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை பெற்று நடாத்துவதற்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை