மட்டு-களுவாஞ்சிக்குடி புகைமண்டலமானது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ இன்று 08-07-2021ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதையடுத்து ஆதரவாளர்கள் பல பகுதிகளிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிற்கு கட்டவுட், மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு பொதுஜனப் பெரமுன கட்சியின கொடிகள் தொங்க விடப்பட்டன.

அத்துடன் ஆதரவாளர்கள் களுவாஞ்சிக்குடி நகரிலும், களுவாஞ்சிக்குடியில் அமைந்துள் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயத்திற்கு முன்பும் பட்டாசு கொழுத்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதனால் அப்பிரதேசமெங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது.


புதியது பழையவை