சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன


சீனாவில் இருந்து ​மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை