இலங்கைக்கு-இந்தியாவின் கடுமையான செய்தி


இந்தியாவின் இறையாண்மைக்கு ஒரு பங்கம் வரும் என்றால் இலங்கையையும் எதிரியாகத் தான் பார்ப்போம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதாக இந்தியாவில் இருக்க கூடிய இராணுவத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இப்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை கட்டுக்குள் கொண்டு வர என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவற்றை எடுத்து பிறகு இந்தியா தனது நிலையை இலங்கைக்கு அறிவிக்கும்.

அந்த அறிவிப்பில் நான் எதிர்பார்ப்பது இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான ஒரு செய்தி அனுப்பப்படும். இது என்னுடைய ஊகம்.
இலங்கையின் வான்பரப்பு, நிலப்பரப்பு, கடற்பரப்பு இதில் ஏதாவதொன்றை எதிரி நாட்டிற்கு கொடுத்து அதன் மூலமாக இந்தியாவின் இறையாண்மைக்கு ஒரு பங்கம் வரும் என்றால் இலங்கையையும் எதிரியாகத் தான் பார்ப்போம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கு முழு காரணம் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை