இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பது உண்மையா?


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இது தொடர்பான விடயம் பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.

 இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றால் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

 இதனால் இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி தொகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது.
புதியது பழையவை