மட்டக்களப்பில் 2000ரூபா உதவி தொகை வழங்கும் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 2000ரூபா உதவித்தொகை வழங்கும் பணிகள் நேற்று(25) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நேற்றைய தினம் 2000ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்கள்பபு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ளவர்களுக்கான 2000ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடுகள் வீடுவீடாக சென்று வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்படு பகுதியில் இந்த உதவி வழங்கும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அருணன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 64485குடும்பங்கள் 2000ரூபா பெறுவதற்கான தகுதியைப்பெற்றுள்ளதாகவும் இதற்காக அரசாங்கத்தினால் 39மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.


புதியது பழையவை